×

நாகமலை அருகே 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது

திருப்பரங்குன்றம்: மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெகடர் சிவக்குமார் அறிவுறுத்தலின்பேரில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நாகமலை புதுக்கோட்டை அருகே ஆலம்பட்டி பகுதியில் டூவீலரில் வந்த இருவரை தடுத்து நிறுத்து சோதனை செய்ததில் 12.5 கிலோ கஞ்சாவை கேரளாவில் இருந்து மதுரைக்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் பேரையூரை சேர்ந்த ஜெயா, காரைக்குடியை சேர்ந்த சேகர் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து 12.5 கிலோ கஞ்சா, ரூ.23 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Nagamalai ,
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...